தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

உலக மக்கள் தொகை தினம் / World Population Day




1986-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.



மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து, சிறுகுடும்ப நெறியின் நன்மைகளை எடுத்துரைப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். 

குடியரசு தினம் / Republic day



நம் பாரத நாடு ஒரு குடியரசு  நாடாகத் திகழ்கின்றது. விடுதலைக்குப் பின் இந்தியத் திருநாடு தனக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை வகுத்துக்கொண்டு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாடானது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய இளைஞர் தினம் / national youth day



உலக இளைஞர் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்ட 1985 ஆண்டு முதல் பாரத திருநாட்டின் புகழை பாரெல்லாம் பரவச் செய்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடபடுகிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஹைக்கூ / haiku


லப்பிடமில்லா கற்கண்டு 
குழந்தையின் சிரிப்பு.........

ஹைக்கூ / haiku




தினம் நூறு முத்தம் 
வெட்கத்தில் அவள் புகைப்படம்...

ஹைக்கூ / haiku




ம்முடன் 
கூடவே வரும் 
நாகரீக எமன் 
கைப்பேசி...........

ஹைக்கூ / haiku




கூவம் ஆறும் 
மணக்கும் 
நீ கடக்கும் வரை....

ஹைக்கூ காதல்


ன்னை பற்றிய 
ஹைக்கூ கவிதை 
எழுத என்னும்போது 
உனது பெயரை தவிர 
வேறொன்றும் தோன்றவில்லை.... 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மரம் வளர்ப்போம் /save trees


டியோடு மரத்தை 
வேகமாய் வெட்டி 
வெயில் சுடும்போது 
மனதும் சுட்டும் 
வானத்தை வெறுத்து 
பார்க்கும் கண்கள்.....
இன்றைக்காவது மழைவருமா.....? 

ஹைக்கூ





கோவிலினுள் கற்பழிப்பு
வெளியே வீச்சரிவாளுடன்
சாமி காவல்

வியாழன், 18 ஏப்ரல், 2013

IPL கிரிக்கெட்



ஏம்பா நமக்கு
தெரிஞ்ச
கபடி,ஹாக்கியெல்லாம்
இப்படி காட்டுனா
கலக்குவோம்ல...
கண் கலங்கி
கைதட்டி பார்க்கும்
கண்கள்.......................
"IPL கிரிக்கெட் "
ம்ம் I FEEL UP.......................

பீர் கடன்/BEER

 விழித்தவுடன் விழிப்புடன் 
வெளியே செல்கிறேன் 
நேற்று பீருக்காக 
நண்பனிடம் வாங்கிய 
நூறு ரூபாய் கடன்.................. 

கூவம்


கூவம் ஆற்றை
கடக்கும்போது
முகம் கூசி
கடக்கிறோம்...

'AC'யிலே வசித்தாலும்
'IC'யிலே வைத்து
வதைக்கும் நோய்கள்....

கூவ வாசிகளோ
கூவி கேட்கிறார்கள்
ஏம்பா டெங்குனா
என்னப்பா ??????????????????????


ஆட்டோகிராப்


ஆட்டோகிராப்

ஆண்டவனிடம் 

ஆட்டோகிராப் வாங்க வேண்டும்!

எனது தலையெழுத்து

எப்படி என்று

அவன் கையெழுத்தில்

பார்த்துவிட... 

பேஷன்


பேஷன்

இப்போது எங்கும்

ஏழை, பணக்காரன்

வித்தியாசம் தெரிவதில்லை

கிழிந்த உடைகள்

பேஷனாகி போனதால்....! 

கருப்பு கண்ணிர்!


கருப்பு கண்ணிர்!

யாருக்கும் எந்த 
 கருப்பு கண்ணிர்!
தீங்கும் செய்யவில்லை

பிறகு ஏன்

என்னை மட்டும் 

துக்கத்தின் அடையாளம்

ஆக்கினீர்கள்.......! 

ஹைக்கூ..!


ஹைக்கூ..!

ஐஸ் கிரீமாக நீ...

கரைவது ஏனோ 

நான்தான் !

ஹைக்கூ...


ஹைக்கூ...

"கருப்பு நிலா

வெண்ணிற மேகங்கள் 

அவள் கண்கள்"

மனதின் முடிவில்லா தேடல்/ galaxy




தோ எனது
தேடலில் இந்த
புவியும் சிறு
பந்தாக....................

பிரபஞ்சத்தை தாண்டிய
மற்றொரு பிரபஞ்சத்தை
அடைந்து
எனது தேடலின்
தொடக்கம் இருக்க
தேடுகிறேன் ஏதோ
ஒன்றை.........................

பாட்டி கதை

கதை கதையாய்
ஆயிரம் கதைகள்
பாதி கதையிலேயே
தூங்கும் எனது
குழந்தை வயது..............
இப்போது நினைவிருந்தால்
கதாசிரியர் ஆகியிருப்பேன்
பாட்டி கதையை
காப்பி அடித்து................

அட போங்கப்பா....





ச்சீ இந்த

பழம் புளிக்கும்.....
நரிக்கதை ஞாபகம் வரும்போதெல்லாம்
எனது பிளாகர்
மட்டுமே ஞாபகம் வருகிறது....
ராப்பகலா கண்விழித்தும்
ஒரு கமெண்டும்
இல்லையே என்று.......................


புதன், 17 ஏப்ரல், 2013

வரும் ஆனா / varum aana





தினம் தினம்
அரசியல்வாதிகளின்
ஆயிரம் அறிக்கைகள்
மழைக்காக காத்திருக்கும்
வறண்ட நிலங்களை போல
நமது எதிர்பார்ப்புகள்...
வரும் ஆனா........................................

தாயின் பாசம் / LOVE MOTHER




கொஞ்சி கொஞ்சி
ஊட்டி வளர்த்த
தாய்.....................
தவிப்புடன் இருக்கிறாள்
அனாதை இல்லத்தில்.....
தன்னை பிரிந்த மகன்
அனாதையாக அலைகிறானே
என்று................

நாகரீக உணவு / fashion food



என்னதான் இருந்தாலும்
பாட்டி ஊட்டிய
கம்பு சோறும்
சோள சோறும்
காலம் மாற மாற
கரைந்து போன
சத்துணுவுகள்.....
நாகரீகமாக நாங்கள்
உண்ண இருக்கிறது
பீட்சாவும்,பர்க்கரும்
காரத்தில் கண்ணீர் வந்தாலும்
புளிப்பால் புன்னகை இழைந்தாலும்
சொல்கிறது எனது உதடுகள்
வாவ் செம TASTE யா.........................

சுததிந்திர பேனா / my freedom pen






னது பேனாவிற்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது........
கவிதை என்ற
நினைப்போடு கிறுக்க
தொடங்குவதற்குள்
மை மறைந்துவிட்டது........................

எனது இதயத்தின்.../enathu ithayathin



எனது இதயத்தின் 
அருகே ஏதோ 
ஒன்று குறைகிறதே 
அடடா.....................
மறந்துவிட்ட எனது 
கைப்பேசி.......................................

காதல் கண்கள் /kathal kangal


கண்ணடித்து சிரித்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.............
பாவமடி என்கண்கள்
கண் சிமிட்டாமல்
பார்க்குதடி..........