உலக எயிட்ஸ் தினம் 1988-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இந்த தினத்தை 2004 வரை UNAIDS என்ற அமைப்பு ஏற்று நடத்தி வந்தது. 2005 முதல் உலக எய்ட்ஸ் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. எய்ட்ஸ் என்பது Acquired Immune Deficiency Syndrome என்பதன் சுருக்கம் ஆகும்.
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை "உலக மனித உரிமை பேரறிக்கை " என உலக மாந்தர் அனைவருக்குமாக வாழ்வுரிமைகளை பிரகடனப் படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதி உலகநாடுகள் அனைத்திலும் 'உலக மனித உரிமை தினம்' கொண்டாடப்படுகிறது.