தேடு

வெள்ளி, 31 மே, 2013

உலக சுற்றுச்சூழல் தினம் /World Environment day




உலக சுற்றுச்சூழல் தினம் 1972-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி ஒரு கருப்பொருளை மையமாககொண்டு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.



இந்த தினத்தின் நோக்கமானது.....


  • சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு.
  • நீரும்,காற்றும் தூய்மையாக  வைத்தல்.
  • இயற்க்கை வளங்கள் எல்லையற்றவை அல்ல. எனவே அவற்றை வீணாக்க கூடாது.

      

உலக புகையிலை ஒழிப்பு தினம்/ world no tobacco day

உலக சுகாதார நிறுவனத்தின்(World Health Organization) உறுப்பு நாடுகள் புகையிலையின் தீமைகளை, ஆபத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் கொண்டுவரப்பட்ட தினமே 'உலக புகையிலை ஒழிப்பு தினம் '. 1988 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே மாதம் 31-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக செஞ்சிலுவை தினம் / World Red Cross Day




1859-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ உதவி இல்லாமல் தவித்தனர். போர் வீரர்களின் இன்னலை நேரில் கண்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி டுனாண்ட் என்பவர் போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு அமைப்பை நிறுவினார். அதுதான் 'ரெட் கிராஸ் சொசைட்டி'.  இவரது பிறந்த நாளான மே 8-ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.

உலக புத்தக தினம் / World book day



ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 23-ம் தேதியை 'உலக புத்தக தினம்' என அறிவித்துள்ளது. படிக்கும் பழக்கத்தினை அனைவருக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  

சர்வதேச தொழிலாளர் தினம் / Indernational Labour day



1885 -ம்  ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பிய நாள் மே மாதம் 1-ம் தேதி. இந்த தினத்தை உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

புதன், 22 மே, 2013

உலக சுகாதார தினம் / World Health Day









'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் ( World Health Organization) ஆதரவில் கொண்டாடப்படுகிறது.

உலக தண்ணீர் தினம் / World Day For Water



ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மைய்யமாக கொண்டு மார்ச் 22-ம் தேதி 'உலக தண்ணீர் தினம்' கடைப்பிடிக்க படுகிறது.

ஞாயிறு, 19 மே, 2013

உலக மனநல தினம் / World Mental Health Day





உலக மனநல மையம் சார்பில் 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் நாள் 'உலக மனநல நாள் ' கடைப்பிடிக்கபடுகிறது.

சனி, 18 மே, 2013

உலக எய்ட்ஸ் தினம் / World AIDS Day




உலக எயிட்ஸ் தினம் 1988-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இந்த தினத்தை 2004 வரை UNAIDS என்ற அமைப்பு ஏற்று நடத்தி வந்தது. 2005 முதல் உலக எய்ட்ஸ் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. எய்ட்ஸ் என்பது Acquired Immune Deficiency Syndrome என்பதன் சுருக்கம் ஆகும்.

'உலக மனித உரிமை/ World human rights day



1948-ஆம்  ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை "உலக மனித உரிமை பேரறிக்கை " என உலக மாந்தர் அனைவருக்குமாக வாழ்வுரிமைகளை பிரகடனப் படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதி உலகநாடுகள் அனைத்திலும் 'உலக மனித உரிமை               தினம்' கொண்டாடப்படுகிறது.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

உலக மக்கள் தொகை தினம் / World Population Day




1986-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.



மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து, சிறுகுடும்ப நெறியின் நன்மைகளை எடுத்துரைப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். 

குடியரசு தினம் / Republic day



நம் பாரத நாடு ஒரு குடியரசு  நாடாகத் திகழ்கின்றது. விடுதலைக்குப் பின் இந்தியத் திருநாடு தனக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை வகுத்துக்கொண்டு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாடானது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய இளைஞர் தினம் / national youth day



உலக இளைஞர் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்ட 1985 ஆண்டு முதல் பாரத திருநாட்டின் புகழை பாரெல்லாம் பரவச் செய்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடபடுகிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஹைக்கூ / haiku


லப்பிடமில்லா கற்கண்டு 
குழந்தையின் சிரிப்பு.........

ஹைக்கூ / haiku




தினம் நூறு முத்தம் 
வெட்கத்தில் அவள் புகைப்படம்...

ஹைக்கூ / haiku




ம்முடன் 
கூடவே வரும் 
நாகரீக எமன் 
கைப்பேசி...........

ஹைக்கூ / haiku




கூவம் ஆறும் 
மணக்கும் 
நீ கடக்கும் வரை....

ஹைக்கூ காதல்


ன்னை பற்றிய 
ஹைக்கூ கவிதை 
எழுத என்னும்போது 
உனது பெயரை தவிர 
வேறொன்றும் தோன்றவில்லை.... 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மரம் வளர்ப்போம் /save trees


டியோடு மரத்தை 
வேகமாய் வெட்டி 
வெயில் சுடும்போது 
மனதும் சுட்டும் 
வானத்தை வெறுத்து 
பார்க்கும் கண்கள்.....
இன்றைக்காவது மழைவருமா.....? 

ஹைக்கூ





கோவிலினுள் கற்பழிப்பு
வெளியே வீச்சரிவாளுடன்
சாமி காவல்

வியாழன், 18 ஏப்ரல், 2013

IPL கிரிக்கெட்



ஏம்பா நமக்கு
தெரிஞ்ச
கபடி,ஹாக்கியெல்லாம்
இப்படி காட்டுனா
கலக்குவோம்ல...
கண் கலங்கி
கைதட்டி பார்க்கும்
கண்கள்.......................
"IPL கிரிக்கெட் "
ம்ம் I FEEL UP.......................

பீர் கடன்/BEER

 விழித்தவுடன் விழிப்புடன் 
வெளியே செல்கிறேன் 
நேற்று பீருக்காக 
நண்பனிடம் வாங்கிய 
நூறு ரூபாய் கடன்.................. 

கூவம்


கூவம் ஆற்றை
கடக்கும்போது
முகம் கூசி
கடக்கிறோம்...

'AC'யிலே வசித்தாலும்
'IC'யிலே வைத்து
வதைக்கும் நோய்கள்....

கூவ வாசிகளோ
கூவி கேட்கிறார்கள்
ஏம்பா டெங்குனா
என்னப்பா ??????????????????????


ஆட்டோகிராப்


ஆட்டோகிராப்

ஆண்டவனிடம் 

ஆட்டோகிராப் வாங்க வேண்டும்!

எனது தலையெழுத்து

எப்படி என்று

அவன் கையெழுத்தில்

பார்த்துவிட... 

பேஷன்


பேஷன்

இப்போது எங்கும்

ஏழை, பணக்காரன்

வித்தியாசம் தெரிவதில்லை

கிழிந்த உடைகள்

பேஷனாகி போனதால்....! 

கருப்பு கண்ணிர்!


கருப்பு கண்ணிர்!

யாருக்கும் எந்த 
 கருப்பு கண்ணிர்!
தீங்கும் செய்யவில்லை

பிறகு ஏன்

என்னை மட்டும் 

துக்கத்தின் அடையாளம்

ஆக்கினீர்கள்.......! 

ஹைக்கூ..!


ஹைக்கூ..!

ஐஸ் கிரீமாக நீ...

கரைவது ஏனோ 

நான்தான் !

ஹைக்கூ...


ஹைக்கூ...

"கருப்பு நிலா

வெண்ணிற மேகங்கள் 

அவள் கண்கள்"

மனதின் முடிவில்லா தேடல்/ galaxy




தோ எனது
தேடலில் இந்த
புவியும் சிறு
பந்தாக....................

பிரபஞ்சத்தை தாண்டிய
மற்றொரு பிரபஞ்சத்தை
அடைந்து
எனது தேடலின்
தொடக்கம் இருக்க
தேடுகிறேன் ஏதோ
ஒன்றை.........................

பாட்டி கதை

கதை கதையாய்
ஆயிரம் கதைகள்
பாதி கதையிலேயே
தூங்கும் எனது
குழந்தை வயது..............
இப்போது நினைவிருந்தால்
கதாசிரியர் ஆகியிருப்பேன்
பாட்டி கதையை
காப்பி அடித்து................

அட போங்கப்பா....





ச்சீ இந்த

பழம் புளிக்கும்.....
நரிக்கதை ஞாபகம் வரும்போதெல்லாம்
எனது பிளாகர்
மட்டுமே ஞாபகம் வருகிறது....
ராப்பகலா கண்விழித்தும்
ஒரு கமெண்டும்
இல்லையே என்று.......................


புதன், 17 ஏப்ரல், 2013

வரும் ஆனா / varum aana





தினம் தினம்
அரசியல்வாதிகளின்
ஆயிரம் அறிக்கைகள்
மழைக்காக காத்திருக்கும்
வறண்ட நிலங்களை போல
நமது எதிர்பார்ப்புகள்...
வரும் ஆனா........................................

தாயின் பாசம் / LOVE MOTHER




கொஞ்சி கொஞ்சி
ஊட்டி வளர்த்த
தாய்.....................
தவிப்புடன் இருக்கிறாள்
அனாதை இல்லத்தில்.....
தன்னை பிரிந்த மகன்
அனாதையாக அலைகிறானே
என்று................

நாகரீக உணவு / fashion food



என்னதான் இருந்தாலும்
பாட்டி ஊட்டிய
கம்பு சோறும்
சோள சோறும்
காலம் மாற மாற
கரைந்து போன
சத்துணுவுகள்.....
நாகரீகமாக நாங்கள்
உண்ண இருக்கிறது
பீட்சாவும்,பர்க்கரும்
காரத்தில் கண்ணீர் வந்தாலும்
புளிப்பால் புன்னகை இழைந்தாலும்
சொல்கிறது எனது உதடுகள்
வாவ் செம TASTE யா.........................

சுததிந்திர பேனா / my freedom pen






னது பேனாவிற்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது........
கவிதை என்ற
நினைப்போடு கிறுக்க
தொடங்குவதற்குள்
மை மறைந்துவிட்டது........................