தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஸ்பென்சர் கட்டிடம் தீயில் எரிந்தது.


1981-ம் ஆண்டில், ஸ்பென்சர் கட்டிடம் தீயில் எரிந்தது. சென்னை அண்ணா சாலையில் அமைந்த இந்த ஸ்பென்சர் கட்டிடம் 1855-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். இங்கு மிகப்பெரிய அளவில் கடைகள் (ஷோரூம்) இருந்தன. விலை உயர்ந்த பொருட்கள், துணிமணிகள்,மருந்துகள், மது மற்றும் பலவித பொருட்கள் விற்கும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. 

13-2-1981 அன்று இரவு 7-30 மணி சுமாருக்கு இந்த `ஸ்பென்சர்' கட்டிடத்தில் சரக்கு குடோனில் தீப்பிடித்தது. அது ஒரு மணி நேரத்துக்குள்ளாக எல்லா கடைகளுக்கும் பரவியது. கடைகளில் இருந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. சென்னை நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வண்டிகளிலும் விரைந்து வந்த வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.

அவர்களுக்கு உதவியாக தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தார்கள். இந்த கட்டிடத்தின் கூரை பர்மா தேக்கு சட்டத்தினால் அமைக்கப்பட்டு அதன் மீது கண்ணாடி போடப்பட்டிருந்தது. தேக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்தபோது கண்ணாடிகள் படார்... படார் என்று வெடித்து சிதறின. தீப்பிழம்புகள் வானத்தை தொடுவது போல எரிந்தன. 

5 மைல் தூரத்துக்கு தீ ஜுவாலை தெரிந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு நள்ளிரவு 12-15 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் ரூ.3 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதத்துக்கு சொந்தமான கடை ஒன்றும் எரிந்து சாம்பலானது. 

இந்த தீ விபத்தில் வியாபாரி ஒருவர் உயிர் இழந்தார். பலர் காயம் அடைந்தார்கள். இப்போது, ஸ்பென்சர் பிளாசா என்ற பெயரில் புதிய கட்டிடம் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டு, கம்பீரமாகக் காட்சி தருகிறது.

கருத்துகள் இல்லை: