தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

ha ha ha....



நிருபர் : நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ?
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
நண்பர் : திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா



கருத்துகள் இல்லை: