தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிரிப் 'பூ



ரமனன் : எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?
மாமி : இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா.
ரமனன் : "வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?"
வேலு : "பரவை முனியம்மா, சார்"
அமைச்சர் : அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர்
அரசர் : ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை
ஒருவர் : மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?
மற்றொருவர் : அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
ஒருவர் : போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார்
தொண்டர் 1 : தலைவர் எங்க நிக்கவச்சாலும் நான் நிப்பேன்னு பெருமையா பேசினது தப்பா போச்சு.
தொண்டர் 2 : ஏன் என்னாச்சு?
தொண்டர் 1 : வீட்டுக்கு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு.
நண்பர் 1 : அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
நண்பர் 2 : அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.


கருத்துகள் இல்லை: