தேடு

தகவல் துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஏப்ரல், 2013

இடி / idi


மின்னல் பாயும்போது ஏற்படும் வெப்பமானது காற்றை கிழித்து கொண்டு

வருவதால் இடி உண்டாகிறது.


மின்னல் / minnal

                                                                                                                                                                                     மின்னல் என்பது ஏறக்குறைய 250 வோல்ட்ஸ் மின்சார சக்தி கொண்டது எனலாம்.
மின்னல் மின்சார சக்தி மட்டுமன்று 

அதிலிருந்து வரும் நைட்ரஜன் 

உரசத்து செடி,கொடிகள் 

வளருவதற்கு பயன்படுகிறது.

வானவில் /VAANAVIL




மழைத்துளிகளின் மீது சூரிய ஒளி

விழுவதால், அதன் பிரதிபலிப்பில் வானவில் 

தோன்றுகிறது. சூரியனின் ஒளிக்கதிர் 

மழைத்துளியில் புகும்போது அது பல 

நிறங்களாக பிரிக்கபடுகிறது. வான வில்லில் 

ஏழு நிறங்கள் உள்ளது  நமக்கு தெரிந்ததே. விப்கியார் என்று அதனை 

வரிசைபடுதியுள்ளனர்.

manithanin yedai/ மனிதனின் எடை

 மனிதனின் எடை  மற்ற கோள்களில் ஒப்பிடும்போது  வேறுபடுவதை ஆய்ந்துள்ளனர். ஆனால் எவ்வளவு என்பதை நாம் அறிந்திலோம். உதாரணமாக 60 கிலோ பூமியில் இருக்கும் மனிதனின் எடை மற்ற கிரகங்களில் இருந்தால் எவ்வளவு எடை என்பதை மேலும் அறிவோம்.


சூரியனில்          1680 கிலோ

வெள்ளியில்     51.6 கிலோ

சந்திரனில்        0.987 கிலோ

புதனில்              21.6 கிலோ

செவ்வாயில்   22.8 கிலோ

வியாழனில்    159 கிலோ

சனியில்           68.4 கிலோ

யுரேனஸ்        57.6 கிலோ

நெப்டியூன்      60.0 கிலோ 

இந்தியா கேட்/ india gate

முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது இந்திய கேட். போரின் போது 9000 வீரர்கள் இறந்தனர். இந்திய கேட்டில் 13,516 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. 1971 முதல் அவ்விடத்தில் 'அமர்ஜோதி' என்ற அணையா விளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இபில் கோபுரம்/eiffel tower


 அலெக்ஸாண்டர் குஸ்தாவ் இபில் என்பவரால் 1889-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் நினைவாக உருவாக்கப்பட்ட இபில் கோபுரமாகும். பாரிஸ் நகரில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் உயரம் 984 அடியாகும்.இதற்காக பயன்படுத்திய இரும்புத் துண்டுகள் 15,000 ஆகும்.இதன் அடித்தளம் மட்டும் 330  சதுர அடியாகும். 

Miga periya rail nilayam/மிக பெரிய ரயில் நிலையம்








நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் என்பதே பெரிய ரயில் நிலையமாகும். மொத்தம் 48 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 550 ரயில்கள் வந்து செல்கின்றன.

ஞாயிறு, 31 மார்ச், 2013

மர்லின் மன்றோ



உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ , அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. 

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார். பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார்.

மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5-8-1962-ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது.

அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர். அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது. தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது.